Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கிலோ மீட்டர் கார் ஓட்டிய அதிசயப் பெண்மணி !

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (08:32 IST)
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது சுமீத் கவுர் எனும் பெண்மணி தலையில் 3 புல்லட்கள் இருக்க 7 கிலோ மீட்டர் கார் ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர். இவரது தந்தை மரணத்தின் போது இவருக்கு 15 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார். அதை அபகரிக்க சுமித்தின் சகோதரர் முயன்றுள்ளார். ஆனால் அதற்கு சுமித் சம்மதிக்கவில்லை.

இது சம்மந்தமாக சுமித் மேல் அவரது சகோதரர் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து சம்பவ தினத்தன்று  சுமித்தின் சகோதரரும் அவரது 10 ஆவது படிக்கும் மகனும் சுமித்தையும் அவரது தாயாரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சுமித்தின் தலையில் 3 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரது தாயாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குண்டுகள் தலையில் இருந்த படியே அவர் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று இது சம்மந்தமாக புகார் அளித்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் இருந்த குண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த சம்பவமானது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments