விளையாட்டு கார் சக்கரத்தில் சிக்கிய முடி: இளம்பெண் மரணம்...

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (15:46 IST)
ஹரியானா மாநிலத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் சிறிய ரேஸ் கார் சக்கரத்தில் பெண் ஒருவரின் தலை முடி சிக்கியத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹரியானா மாநிலம் பதிண்டா பகுதியை சேர்ந்த புனீத் கவுர் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை ஒட்டி பிஜ்னோரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த கோ-கார்ட் எனப்படும் சிறிய அளவிலான ரேஸ் காரில் பயணம் செய்துள்ளார். 
 
பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் புனீத்தின் தலை முடி காரின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கியது. கார் சற்று வேகமாக சென்றதால் அவரால் முடியை எடுக்க முடியவில்லை. பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு கார் நிறுத்தப்பட்டது. 
 
ஆனால், அதற்குள் அவரது முடியுடன் தலையின் தோல் பகுதியும் பெயர்ந்து வந்தது. ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த புனீத்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் அதற்குள் இறந்துவிட்டார். 
 
இந்நிலையில், அந்த பூங்கா உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புனீத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். மேலும், ஹெல்மட் அணிந்திருந்தும் புனீத்தின் முடி சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments