Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு கார் சக்கரத்தில் சிக்கிய முடி: இளம்பெண் மரணம்...

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (15:46 IST)
ஹரியானா மாநிலத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் சிறிய ரேஸ் கார் சக்கரத்தில் பெண் ஒருவரின் தலை முடி சிக்கியத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹரியானா மாநிலம் பதிண்டா பகுதியை சேர்ந்த புனீத் கவுர் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை ஒட்டி பிஜ்னோரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த கோ-கார்ட் எனப்படும் சிறிய அளவிலான ரேஸ் காரில் பயணம் செய்துள்ளார். 
 
பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் புனீத்தின் தலை முடி காரின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கியது. கார் சற்று வேகமாக சென்றதால் அவரால் முடியை எடுக்க முடியவில்லை. பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு கார் நிறுத்தப்பட்டது. 
 
ஆனால், அதற்குள் அவரது முடியுடன் தலையின் தோல் பகுதியும் பெயர்ந்து வந்தது. ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த புனீத்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் அதற்குள் இறந்துவிட்டார். 
 
இந்நிலையில், அந்த பூங்கா உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புனீத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். மேலும், ஹெல்மட் அணிந்திருந்தும் புனீத்தின் முடி சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments