Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவானில் விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:49 IST)
நடு வானில் விமான ஊழியர்களை சரமாரியாக பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அபுதாவியிலிருந்து மும்பை வந்து கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்த நிலையில் சொகுசு வகுப்பில் இடம் காலியாக இருந்ததால் அங்கு சென்று உட்கார்ந்து இருந்தார்.
 
இதனை அடுத்து விமான ஊழியர்கள் அவரை சாதாரண வகுப்பு இருக்கையில் அமருமாறு கூறினர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அந்த பெண் ஊழியர் திடீரென விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் விமானம் மும்பை இறங்கியவுடன் விமான ஊழியர்களின் புகாரின் அடிப்படையில் இத்தாலியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments