Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்தரபிரதேசத்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை !!

உத்தரபிரதேசத்தில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை !!
, புதன், 6 ஜனவரி 2021 (17:55 IST)
உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடக்கிறது. இந்நிலையில் அங்கு  50 வயதுள்ள பெண்ணை சிலர் கூட்டுப்பலாத்காரம் செய்து கொலைசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளம்பெண் 15 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

 
இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை சட்டப்படி கடுமையாக தண்டிக்க பிரதமர் மோடி, உபி முதல்வருக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் பதாவ்ன் என்ற பகுதியில்ல் கோவிலுக்குச் சென்ர 50 வயதுள்ள பெண், பூசாரி உள்ளிட 2 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பெண்ணின் சடலத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற உடற்கூராய்வுக்கு  உட்படுத்தினர்.

இதில், பெண்ணுறுப்பு சிதைப்பட்டு அவரது  கால்களும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது இதுகுறித்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியரசு தினவிழாவை ஏன் ரத்து செய்யக்கூடாது? காங்கிரஸ் எம்பி கேள்வி!