Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விப்ரோ சி.இ.ஓ திடீரென பதவி விலகல்.. என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (07:24 IST)
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் திடீரென நிறுவனத்தின் சிஇஓ தியரி டெலாபோர்ட் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார் 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ பதவியை ஏற்ற தியோரி, விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் இவர் சிஇஓ பதவிக்கு வந்தவுடன் விப்ரோ உயர்மட்ட நிர்வாகத்தில் சில அதிரடி மாற்றங்களை செய்தார், அப்படி செய்தால் தான் நிறுவனம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் முடிவு செய்தார் 
 
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக இருந்த தியோரி, திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது விலகல் விப்ரோ நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ என்ன காரணத்திற்காக விலகினார் என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments