விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் விமானத்தில் பறக்க தொடங்கினார்....

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (14:00 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எஃப்.16 விமானம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் பிடியில் சிக்கினார்.
 
மார்ச் 1ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இதனால் அபிநந்தன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார்.
 
சென்னையை சேர்ந்த இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர்.
 
இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி  விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது "வீர் சக்ரா விருது" வழங்கி இந்தியா கௌரவித்தது. 
 
இந்நிலையில் இன்று இன்று மீண்டும் விமானத்தில் பறக்கத்தொடங்கினார் அபிநந்தன். மிக் 21 ரக விமானத்தை விமானப்படை தளபதி பி.எஸ். மேத்தாவுடன் , இயக்கினார் அபிநந்தன். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக.. திமுக.. கூட்டணியில் இரண்டு குரல்கள்!. தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்படுமா?...

தவெகவுக்கு ஆதரவு இருக்கு!. திமுக கூட்டணில் குண்டு போடும் கிரிஷ் சோடங்கர்

திமுகவுடன் பேசியிருக்கிறோம்!.. பேரம் பேசவில்லை!.. திருமாவளவன் பேட்டி..

அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ரேடாரை அழித்துவிட்டோம்: ஈரான் அறிவிப்பால் பரபரப்பு..!

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்!.. போலீசார் வழக்குபதிவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments