Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் முடிவுக்கு வருமா? ரஷ்யாவை தொடர்ந்து உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.!

Senthil Velan
சனி, 27 ஜூலை 2024 (13:00 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர்  இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.   கடந்த ஜூலை 8ஆம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்து இருப்பதை பார்க்கையில், அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
 
இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தான்  பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ALSO READ: நிதி ஆயோக் கூட்டத்தில் பாராபட்சம்.! மம்தா பானர்ஜி வெளிநடப்பு..!!

ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்ல இருப்பதாகவும், இந்த பயணத்தின் போது போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்டவைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மத்திய வெளியுறவு அமைச்சகம் பிரதமர் மோடியின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

புனித நகரங்கள், புனித தலங்களில் மது, இறைச்சிக்கு தடை.. மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

எம்எல்ஏ இல்ல திறப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பங்கேற்பு!

ஓடும் ரயிலில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞரை அடித்தே கொலை செய்த பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments