Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி ஆயோக் கூட்டத்தில் பாராபட்சம்.! மம்தா பானர்ஜி வெளிநடப்பு..!!

Senthil Velan
சனி, 27 ஜூலை 2024 (12:29 IST)
5 நிமிடத்திற்கு மேல் என்னை பேசவிடவில்லை என கூறி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். 
 
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம், டில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி, இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். 
 
ஆனால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அவர் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து பங்கேற்ற ஒரே முதலமைச்சர் நான் மட்டுமே என்றார். 

ALSO READ: மத்திய பட்ஜெட்டுக்கு கண்டனம்.! தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்.!!

நிதி ஆயோக் கூட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்னை பேச விடவில்லை எனவும் குற்றம் சாட்டினார். அதனாலேயே நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments