Publish Date: Tue, 07 Dec 2021 (23:36 IST)
Updated Date: Tue, 07 Dec 2021 (23:41 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில அமைச்சர் கொரோனா அதிகரித்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் கூறியுள்ளதாவது: கொரோனா பரவல் அதிகரித்தால் பள்ளிகளை மூடுவது மற்றும் தேர்வுகளை நிறுத்துவது போன்ற நடவடிக்கைளை எடுக்க அரசு தயங்காது என தெரிவித்துள்ளார்.