Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து. தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (04:01 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு ரூ.4000 பணம் கொடுத்தது வெட்டவெளிச்சமாகியுள்ளதால் இங்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரியான நஜீம் ஜைதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது



 


வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் வருமானவரி துறையினர் சோதனை மூலம் கிடைத்ததன் காரணமாக இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒன்று அதன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் 324ன் கீழ் 150, 30 மற்றும் 56 பிரிவு, மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1952 மற்றும் பொது உட்பிரிவு சட்டம் 1897, 21 பிரிவின் கீழ்  தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேசமயம். நேர்மையான சூழல் நிலவும் போது மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் இறந்த பின்பு 6 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments