Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீன்ஸ் போட அனுமதிக்காததால் கணவரை கத்தியால் குத்திய மனைவி: மாமியார் புகார்.

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:23 IST)
ஜீன்ஸ் போட அனுமதிக்காததால் கணவரை கத்தியால் குத்திய மனைவி குறித்து அவருடைய மாமியார் காவல்துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. புஷ்பாவுக்கு ஜீன்ஸ் போட வேண்டும் என்ற ஆசை இருக்கும் நிலையில் அவருடைய கணவர் அதற்கு அனுமதி மறுத்திருக்கிறார்
 
 இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஜீன்ஸ் போட கூடாது என கணவன் கூற, அதனால் இருவருக்கும் சண்டை வந்த நிலையில் ஆத்திரத்தில் புஷ்பா கத்தியை எடுத்து தனது கணவரை குத்தியிருக்கிறார் 
 
இதனை அடுத்து படுகாயமடைந்த புஷ்பாவின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து தனது மகனை மருமகள் புஷ்பாதான் கத்தியால் குத்திக் கொன்று விட்டார் என அவரது மாமியார் போலீசில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments