Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுடன் உல்லாசம்; நேரில் கண்ட கணவன் கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொலை

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (12:58 IST)
கர்நாடக மாநிலத்தில் காதலுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மைசூர் மாவட்டம் உன்சூர் பகுதியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து விசாரணையை துவங்கிய போலீஸார் அது சிவகுமார் என்பவரின் உடல் என்பதை கண்டுபிடித்து அவரது மனைவி திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திவ்யா திருமணத்திற்கு முன்னர் சேத்தன் என்பவரை காதலித்துள்ளார். ஆனால், சில காரணங்களால் திவ்யா சிவகுமாரை திருமணம் செய்துள்ளார். காதலனை மறக்காத திவ்யா கணவன் வாங்கிக்கொடுத்த போனை பயன்படுத்தி பேஸ்புக் மூலம் சேத்தனுடன் தொடர்பில் இருந்துள்ளார். 
அதோடு நிறுத்தாமல் கணவன் வீட்டில் இல்லாத போது சேத்தனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக இதை சிவகுமார் பார்த்துவிட்டு மனைவி திவ்யாவை கண்டித்துள்ளார். ஆனால், திவ்யா காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர் திவ்யா, சேத்தன் மற்றும் கூலிப்படை கும்பலையும் கைது செய்துள்ளனர். கூலிப்படை தலைவனை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments