Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்: கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்: கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

16 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்: கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:28 IST)
தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் திருமணமான பெண் ஒருவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவனுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இதற்கு தடையாக இருந்த கணவரையும் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
புல்லையா மேண்டம்(30), அவரது மனைவி பிரவல்லிகா(25). இவர்களது வீட்டில் பிவல்லிகாவின் அண்ணன் மகன் ஒருவன் தங்கி படித்து வந்தான். 16 வயதான அவன் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
 
இவர்கள் இருவரும் வீட்டில் கணவருக்கு தெரியாமல் உறவு கொண்டு வந்துள்ளனர். இந்த கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால் அவரை கொன்றுவிட முடிவு செய்தனர்.
 
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணவரை பிரவல்லிகா தலை முடியை பிடித்து சுவரில் வேகமாக அடித்துள்ளார். மேலும் அவரின் ஆணுறுப்பில் வேகமாக காலால் உதைத்துள்ளார். இதனால் அவர் மிகக்கொடூரமாக இறந்தார்.
 
பின்னர் அவரின் இறந்த உடலை கள்ளக்காதலன் சிறுவனுடன் பைக்கில் வைத்து வெளியே கொண்டு செல்லும் போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். போலீசிடம் தொடக்கத்தில் பொய் கூறிய இருவரும் பின்னர் தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை கலவர வழக்கு: 10ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி சிறை ‘ஹவுஸ்ஃபுல்’