Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்: வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (13:10 IST)
உத்திரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை, கணவன் கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாகன்பூர் என்ற மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தன் மனைவியுடம் 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டுள்ளார். ஆனால், அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் பெல்டால் தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளான்.
 
இதனால் அந்த பெண் மயக்கமடைந்தாள். பின்னர் மயக்கமடைந்த மனைவியின் துப்பட்டாவை பயன்படுத்தி, கையை கட்டிபொட்டு கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்துள்ளான். பின்னர் அந்த வீடியோவை மனைவியின் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளான்.
 
இந்த வீடியோவை கண்ட பெண்ணின் குடும்பத்தினர், உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து. போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 

நன்றி: ABP

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments