தமிழகத்திற்கு படையெடுத்து வரும் மோடி-அமித்ஷா.. தலையே காட்டாத ராகுல், சோனியா..!

Siva
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:00 IST)
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டு பக்கமே இன்னும் வராமல் இருப்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், புதுவையில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மற்றும் அமித்ஷா அடுத்தடுத்து தமிழகம் வர இருக்கும் நிலையில் தமிழக பக்கம் ராகுல் மற்றும் சோனியா காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஏற்கனவே சொதப்பல் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தான் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் கூட அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு தேசிய தலைவர்கள் யாரும் வராமல் இருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் இல்லாமல் இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களிலாவது ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - ராமேஸ்வரம் 7.5 மணி நேரத்தில்.. விரைவில் தொடங்குகிறது வந்தே பாரத் ரயில் சேவை..

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்