Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்பு வாரியம் இருக்கலாம், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் இருக்க கூடாதா? பவன் கல்யாண்

Mahendran
திங்கள், 24 பிப்ரவரி 2025 (15:19 IST)
வக்பு வாரியம் இருக்கும்போது, சனாதன பாதுகாப்பு வாரியம் ஏன் இருக்கக்கூடாது என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், செய்தியாளர்களை சந்தித்த போது, "ஓ.எஸ்.ஆர்.  காங்கிரஸ் கட்சி" என்றாலே கூச்சல் குழப்பம் என்றுதான் அர்த்தம். கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை என்றால், அவர்கள் "ஓ.எஸ்.ஆர்.  காங்கிரஸ்" என அழைக்கப்படமாட்டார்கள்" என்று கிண்டல் செய்தார்.
 
"இந்தியாவில் வக்பு வாரியம் இருக்கின்ற நிலையில், சனாதன தர்ம பாதுகாப்பு முறை ஏன் இருக்கக் கூடாது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
 
அப்படி கோரிக்கை வைப்பதாக இருந்தால், அவர்கள் ஜெர்மனிக்குத் தான் செல்ல வேண்டும். ஜெர்மனியில் தான்  வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சி அமைந்துள்ளது. எனவே, இந்த கோரிக்கை வைக்கும் அவர்கள் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும்; இந்தியாவில் இதனை அனுமதிக்க முடியாது," என்று அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments