Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் நாற்காலி எங்களுக்குத்தான்: சிவசேனா பிடிவாதத்தால் பாஜக அதிருப்தி

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (09:40 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி ஏற்படுமா? ஏற்படாதா? என்ற இழுபறி இருந்த நிலையில் ஒருவழியாக இருதரப்பினர்களும் சமாதானமாக பேசி கூட்டணியை இறுதி செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக 150 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இருப்பினும் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வொர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிடுவதால் அவரை முதல்வராக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தீவிர முயற்சியில் உள்ளனர். ஆனால் தனிப்பெரும்பான்மை பெற்று மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தசரா ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, ‘முதல்வர் நாற்காலியில் சிவசேனா அமரும் என்றும், கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதால் அடக்கி வாசிப்பதாகவும், எங்களுக்கு தேர்தலில் வெல்வதை விட அமைச்சரவையில் எங்கள் கொடி உயரப் பறக்க வேண்டும் என்பதுதான் இலக்கு என்றும் பேசியுள்ளார். சஞ்சய் ரவுத்தின் இந்த பேச்சு பாஜகவினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments