Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிஷீல்டு இரண்டு தவணைகளுக்கு இடையே அதிகரிக்கும் இடைவெளி… அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவர் கருத்து!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (13:10 IST)
கோவிஷீல்டு இரண்டு தவணை தடுப்பூசிகளுக்கு நடுவே இடைவெளியை அதிகரிப்பது நல்ல அனுகுமுறை என வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் கடைசி தவணைக்கு இடையிலான இடைவெளி அதிகமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘ இந்தியா போன்ற கடினமான சூழலை எதிர்கொள்ளும் நாட்டில் இந்த அனுகுமுறை சரியானதுதான். காலதாமதம் என்பது உண்மைதான். ஆனால் அது தடுப்பூசி செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் மிகக்குறைவுதான்’ எனக் கூறியுள்ளார். இரு தவனைகளுக்கு இடையிலான காலத்தை 12 -16 வாரமாக மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments