ஆந்திராவில் புதிய தலைநகர் எப்போது செயல்பாட்டிற்கு வரும்? முதல்வர் தகவல்

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (21:39 IST)
செப்டம்பர் மாதம் முதல் ஆந்திர மாநில தலைநகராக விசாசபட்டினம் செயல்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது.

அதன்பின்னர், இரு மாநிலத்திற்கும் பொதுவான மா நிலமாக ஐதராபாத் இருந்த நிலையில்,  தெலுங்கு தேசம் கட்சி விஜயவாடா அருகிலுள்ள அமராவதியை ஆந்திர மாநிலத் தலைநகராக அறிவித்தது.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், சட்டமன்றம், தலைமைச் செயலகம் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

பின்னர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும்,  நிர்வாக  தலைநகராக, தொழில் நகரமான  விசாகபட்டினமும்,  நீதிமன்ற தலை நகராக கர்நூலும் இருக்குமென்று அறிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று ஸ்ரீகாளகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திரம் மாநில தலைநகரராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments