Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் புதிய தலைநகர் எப்போது செயல்பாட்டிற்கு வரும்? முதல்வர் தகவல்

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (21:39 IST)
செப்டம்பர் மாதம் முதல் ஆந்திர மாநில தலைநகராக விசாசபட்டினம் செயல்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது.

அதன்பின்னர், இரு மாநிலத்திற்கும் பொதுவான மா நிலமாக ஐதராபாத் இருந்த நிலையில்,  தெலுங்கு தேசம் கட்சி விஜயவாடா அருகிலுள்ள அமராவதியை ஆந்திர மாநிலத் தலைநகராக அறிவித்தது.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில், சட்டமன்றம், தலைமைச் செயலகம் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

பின்னர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும்,  நிர்வாக  தலைநகராக, தொழில் நகரமான  விசாகபட்டினமும்,  நீதிமன்ற தலை நகராக கர்நூலும் இருக்குமென்று அறிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று ஸ்ரீகாளகுளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திரம் மாநில தலைநகரராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments