5 ஜி சேவை எப்போது தொடக்கம்? மத்திய அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:20 IST)
அக்டோபர் மாதம் 12 க்குள் இந்த சேவையை அறிமுகம் செய்வோம்.  என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 5ஜி சேவைக்கான ஏலம் நடந்தது என்பதும் இந்த ஏலத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகமாக ஏலம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் முதல்கட்டமாக 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஆயத்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று  மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:  இந்தியாவில் 5 ஜி சேவைகளை அறிமுகம் எய்ய தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். வரும் அக்டோபர் மாதம் 12 க்குள் இந்த சேவையை அறிமுகம் செய்வோம்.  பிறகு மற்ற நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை இருக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments