Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? மத்திய அரசு தகவல்!

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? மத்திய அரசு தகவல்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:14 IST)
கடந்த சில மாதங்களாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இதனால் இந்தியாவில் அக்டோபரில் மூன்றாவது அலை தோன்றும் என்று கூறப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மூன்றாவது அலை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. சிறுவர்களுக்கான தடுப்பூசி தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அனுமதி அளித்ததும் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டது
 
ஆனால் மத்திய அரசு இதுகுறித்து கூறுகையில் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிந்த பின்னரே சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என கூறியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி விலை ரூபாய் 93: பொதுமக்கள் அதிர்ச்சி