Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தி பண்ணுனது வேற.. மோடி கரெக்ட்டான ரூட்ல போயிட்டிருக்கார்!? - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து!

Prasanth Karthick
திங்கள், 12 மே 2025 (09:26 IST)

இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்த காங்கிரஸின் விமர்சனத்திற்கு நேர்மாறான கருத்தைக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரில் அமெரிக்கா சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் 1971ல் நடந்த போரில் இந்திரா காந்தி அமெரிக்காவிற்கு எதிராக வலுவாக செயல்பட்டதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை விமர்சித்து வந்தனர்.

 

இந்நிலையில் காங்கிரஸின் இந்த கருத்தோடு கேரளா காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மாறுபட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ஒரு இந்திய நாட்டின் குடிமகனாக 1971 போரில் இந்திரா காந்தியின் துணிச்சல் நடவடிக்கைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் தற்போதைய நிலைமை 1971ல் இருந்து வேறுபட்டது. அப்போது வங்கதேச சுதந்திரத்திற்காக இந்தியா தோள் நின்றது. வங்கதேச விடுவிப்பே இந்தியாவின் இலக்காக இருந்தது.

 

ஆனால் இன்றைய போராட்டத்தின் குறிக்கோள் பயங்கரவாதிகளை ஒழிப்பதும், அவர்களை அனுப்பியவர்களுக்கு பாடம் கற்பிப்பதும் ஆகும். அதற்கான விலையை அவர்கள் கொடுத்தால் போதும். அது நடந்துவிட்டது. அதற்கு மேலும் போரை நீடிப்பதில் அர்த்தம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments