’அபிநந்தன் ’பெயர் வைத்தால் என்னென்ன சலுகைகள் தெரியுமா ?

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (19:44 IST)
தாய் நாட்டை காப்பதற்காக விமானப்படையில் பணிபுரிந்து எதிரி நாட்டிடம் சிக்கி, தன் உயிரையும் பணயம் வைத்து இந்தியாவின் ரகசியத்தை சற்றும் வெளிப்படுத்தாமல் தைரியமாக பாகிஸ்தான் அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்ட விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அவரது பெயருக்கு ஏகப்பட்ட சலுகைகளை நம் நாட்டவர்கள் அதிக தேசப்பற்றின் பொருட்டு அளித்து வருகின்றனர்.
 
அபிநந்தன் என்ற பெயர் வைத்திருக்கும் மக்களுக்கு பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் இலவச பீட்சா வழங்கப்படும் என ஒரு ஹோட்டல் நிறுவனம் தெரிவித்தது.
அதேபோன்று ஆண்கள சிகை திருந்தும் கடைகளிலும் அபிநந்தன் என்ற பெயருள்ள வாடிக்கையாளருக்கு பணம் பெறாமல் சிகை திருத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அபிநந்தன் போன்று மீசை வைத்து சிகை திருத்தம் வைக்க விரும்பினால்  மக்களுக்கு இலவமாகவே கடை உரிமையாளர்கள் செய்து தருகின்றனர்.
 
இதனால் இந்தக் கடைகளில் கூட்டமும் அல்லுகிறது. வியாபாரமும் எகிறுகிறது.  தேசப்பக்தியை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments