Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வேன்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (19:31 IST)
தமிழக முதல்வர் உள்பட பல மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிக்கு மேற்கு வங்கத்தில் தொகுதிகள் ஒதுக்கவில்லை என்பதும் அவர் தனியாக தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பட்ஜெட்டில் ஓரவஞ்சனை செய்வதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட ஒரு சில மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் மேற்கு வங்கம் மீது மத்திய அரசு காட்டும் பாகுபாடு குறித்து எனது எதிர்ப்பை அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பதிவு செய்வேன் என்றும் அதற்காகவே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதேபோல் தமிழக முதல்வர் உள்பட மற்ற மாநில முதல்வர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம் என கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments