திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பாஜகவுக்கு தாவல்! – மம்தாவுக்கு சிக்கல்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (17:50 IST)
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக நியமிக்கப்பட்டவர் பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே தேர்தல் குறித்த பெரும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் முன்னதாக 291 தொகுதிகளுக்கான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அம்மாநிலத்தின் ஹபிப்பூர் தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சரளா முர்மு. இந்நிலையில் சரளா மர்மூ மற்றும் 4 திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று திடீரென பாஜகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சரளா முர்முவுக்கு பதிலாக ஹபிப்பூர் தொகுதி வேட்பாளராக பிரதீப் பாஸ்கி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments