Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் தான் உண்மையான இந்துக்கள்: பாஜகவை விளாசிய முதலமைச்சர்

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (08:40 IST)
பாஜகவினர் நாங்கள் தான் உண்மையான இந்துக்கள் என்று பொய் கூறி வருகின்றனர். உண்மையில் அவர்கள் போலி இந்துக்கள், நாங்கள் தான் உண்மையான இந்துக்கள் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆவேசமாக கூறியுள்ளார்.
 
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஆட்சி செய்து இந்தியாவின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை. காங்கிரஸ் உண்மையாக வேலை செய்திருந்தால் இந்தியா இந்நேரம் சிங்கப்பூர், சீனா போல் வளமாக இருந்திருக்கும்
 
காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒரே மாதிரிதான் ஆட்சி செய்து வருகின்றனர். ஒரு திட்டம் ஆரம்பித்தால் அந்த திட்டத்திற்கு நேரு, ராஜிவ் காந்தி, இந்திரா காந்தியின் பெயர்களை காங்கிரஸ் அரசும், தீன்தயாள் உபாத்யாயா, ஷியாம் பிரகாஷ் முகர்ஜியின் பெயர்களை பாஜக அரசும் வைப்பார்கள். பெயர்கள் தான் மாறுமே தவிர, மக்களுக்கான பயன் என்றுமே சென்று சேராது.
 
இந்தியாவை வளமான பாதைக்கு கொண்டு செல்ல காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியின் ஆட்சி மத்தியில் அமையவேண்டும்' என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments