வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமா? IISER ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (10:21 IST)
வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகள் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள மூன்று மலை கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் வயநாடு பகுதியில் கனமழை பெய்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டு குவிந்துள்ள பாறை கற்கள் மற்றும் மண்ணுடன் சேர்ந்து அப்பகுதியில் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை அகற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments