Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் செல்லும் குடிநீர்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (07:51 IST)
கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் இயல்பு நிலை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறி முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்.
 
மீட்புப்பணியினர் முடிந்தவரை வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரள மக்களின் குடிநீருக்காக தெற்கு இரயில்வே சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
கேரள மாநிலம் முழுவதும் தண்ணீரால் மூழ்கியிருந்தாலும் அம்மாநில மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். சென்னையில் இருந்து ரயிலில் செல்லும் தண்ணீர் ஓரளவு கேரள மக்களின் தாகத்தை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments