Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளா வெள்ளத்திற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்: சுற்றுச்சூழல் நிபுணர் கருத்து

கேரளா வெள்ளத்திற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்: சுற்றுச்சூழல் நிபுணர் கருத்து
, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (20:55 IST)
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேய்மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.
 
இந்த நிலையில் கேரளாவின் இந்த பெரும் சேதத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் என்பவர் கூறியுள்ளார்.
 
பேராசிரியரான மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழு ஒன்று பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கடந்த 2010ஆம் ஆண்டு ஆய்வு செய்தது. 2011ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கையில் உடனடியாக கேரளாவில் மலைப்பகுதிகளில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், மணல் குவாரிகள், சுரங்க பணிகளை உடனடியாக தடைசெய்யவேண்டும் என்றூம் காடுகள் அழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஆனால் இந்த ஆய்வின் அறிக்கையை அன்றைய காங்கிரஸ் அரசு அலட்சியம் செய்தத்தால் தான் இன்று இவ்வளவு பெரிய சேதாரங்களை சந்திக்க வேண்டியதுள்ள்தாக மாதவ் காட்கில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவுக்கு இலவச கால் மற்றும் டேட்டாக்கள்: செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு