Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது : ஜெயம் ரவி நாயகியின் சர்ச்சை வீடியோ

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது : ஜெயம் ரவி நாயகியின் சர்ச்சை வீடியோ
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (16:32 IST)
தமிழக மக்களுக்கு, கர்நாடகம் தண்ணீர் வழங்கக் கூடாது என்று கன்னட நடிகை ஒருவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகாவிடமிருந்து ஒவ்வொரு முறையும், போராடித்தான் காவிரி நீரை பெற வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்புதான், தற்போது தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு.

அதற்கு அங்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. நாளை அங்கு பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “தமிழர்களுக்கு நாம் ஏன் தண்ணீர் தரவேண்டும். காவிர் நீர் நம்முடையது” எனும் ரீதியில் பேசுகிறார்.

இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார்....

இந்த சர்ச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு