Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு

அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு

அதிபர் சிறிசேனா 6 மாதத்தில் இறந்து விடுவார்: இலங்கையில் பரபரப்பு
, வியாழன், 8 செப்டம்பர் 2016 (16:17 IST)
இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரி பால சிறிசேனா இன்னும் ஆறு மாதத்தில் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து சொன்னதால் இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


 
 
சிறிசேனா இறந்த பின்னர் கோத்தபய ராஜபக்சேவே மீண்டும் இலங்கையின் அதிபர் ஆவார் என பிரபல ஜோதிடரான விஜித் ரோஹனவிஜயமுனி உறுதியாக கூறினார்.
 
தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியதால் அந்த ஜோதிடர் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தான் கூறியது வெறும் கணிப்பு தான் என அந்த ஜோதிடர் தற்போது கூறி வருகிறார்.
 
ஜோதிடரின் இந்த கணிப்புக்கு பின்னர் அவருக்கு சில அரசியல்வாதிகள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -4 தேர்வு: விண்ணப்பிக்க 6 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு