Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு: பீதியில் மக்கள்!

4 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பு: பீதியில் மக்கள்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:22 IST)
ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் இருந்து கனமழை காரணமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் நீர் மட்டும் 2,403 அடியை எட்டியிருக்கிறது. 
 
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை வேகமாக நிரம்பும் நிலையில் உள்ளதால் முதற்கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பொதுசெயலாளர் என்றே கடிதம் எழுதிய சசிக்கலா! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!