Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

Advertiesment
rahul gandhi

Mahendran

, திங்கள், 19 மே 2025 (14:33 IST)
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு தாக்குதல் குறித்த தகவல் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் “எத்தனை இந்திய போர் விமானங்களை நாம் இழந்தோம்? தாக்குதலுக்கு முன் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது தவறு மட்டுமல்ல, அது நாட்டுக்கெதிரான குற்றமாகும்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.
 
ஏற்கனவே ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம், "பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தானுக்கு முன்பே கூறியதாக" தெரிவித்திருந்தார். இதை ஆதாரமாக கொண்ட ராகுல், இந்தியாவின் ராணுவத் தரப்பை பலவீனமாக்கும் நடவடிக்கையாக இது உள்ளதாக குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில், பத்திரிகை தகவல் சரிபார்ப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் பற்றிய விளக்கம் பாகிஸ்தானுக்கு முற்றிலும் முன்பாக இல்லை எனவும், பின்னர் மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டது எனவும் தெரிவித்தது.
 
இந்த சூழலில், ராகுல் காந்தி மீண்டும் தன்னுடைய பதிப்பில், “ஜெய்சங்கர் இன்று பேசியது மோசமானது. உண்மை வெளிவர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!