Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற தேர்தல்: 1 மணி நிலவர வாக்குபதிவு விவரம்!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:22 IST)
கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 44.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
 
உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் 55 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
 
உத்தராகண்டில் உள்ள 70 தொகுதிகளும், கோவாவில் உள்ள 40 தொகுதிகளும் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 44.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
 
உத்திரப்பிரதேச சட்டமன்ற 2 ஆம் தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 39.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 35.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments