Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்குக் கேட்க கூடாது !

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (21:02 IST)
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாதி மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்குக் கேட்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
சமீபத்தில்  தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
 
அதன்படி அனைத்துக் கட்சிகளும் ஒரேகட்டமாக தேர்தலை நடத்தும்படி கேட்டுக்கொண்டதாக கூறியிருந்தார்.
 
அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ள   நிலையில் விரைவில்  நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.  இந்நிலையில் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடக் கூடாது என தமிழக அரசுக்கு  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாதி மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்குக் கேட்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:
 
''சாதி மதம் மற்றும் மோழி அடிப்படையில் வாக்குக் கேட்கவோ, மத உணர்வுகளை அவமதிக்கவோ கூடாது!. கோயில்கள் , மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது'' என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments