Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் வாக்குப்பதிவு ஆரம்பம்.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!

மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் வாக்குப்பதிவு ஆரம்பம்.. ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!
, வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:32 IST)
இந்தியாவில் தற்போது ஐந்து மாநில தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 70 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சற்றுமுன் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மத்திய பிரதேச மாநில மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

 மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் தற்போது விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 ஐந்து மாநிலங்களில்  பதிவான வாக்குகள் டிசம்பர் மூன்றாம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஐந்து மாநில தேர்தலை ஒரு மினி நாடாளுமன்ற தேர்தலாகவே அரசியல் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகமது ஷமி: விவசாயி மகன் தடைகளை உடைத்து உலகக் கோப்பையில் சாதித்தது எப்படி?