Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறை பேச்சு... எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்ய முடியாது : டெல்லி போலீஸார் பதில் !

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:54 IST)
வன்முறை பேச்சு... எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்ய முடியாது : டெல்லி போலீஸார் பதில் !

டெல்லியில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருப்பவர்கள் மத்தியில் எழுந்த கலவரத்தில் இதுவரை 21 பேருக்கு மேல் இறந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பாஜக தலைவர்களையும் டெல்லி போலீஸாரையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய தலைவர்கள் மிது வழக்குப் பதிவு செய்யாதவது ஏன் என நீதிமன்றம் கேட்டிருந்தது.
 
இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அம்மாநில காவல்துறை தரப்பில் பதில் அளித்துள்ளது.
 
அதில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
மேலும், வன்முறையைத் தூண்டியதாக தற்போது வழக்குப் பதிவு செய்வது என்பது அமைதி திரும்ப உதவாது.  வன்முறையை தூண்டியதாக தற்போதைய சூழலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது என டெல்லி காவல்துறை பதில் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments