Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடூரம்! இளம்பெண்னை மரத்தில் கட்டி வெளுத்த ஊர் மக்கள்

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (11:38 IST)
வேறு சாதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்ததால், இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து ஊர் மக்கள் அனைவரும் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பீகார்  மாநிலத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நவடா மாவட்டம் ராஜவுளி என்கிற கிராமத்தில் வசித்து வந்த ஒரு இளம்பெண், பக்கத்து கிராமத்தில் உள்ள வேறு சாதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்துள்ளார். இந்த விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவர அவரை வீட்டு சிறையினுள் வைத்ததாக தெரிகிறது. 
 
ஆனால், அந்த இளைஞரை மறக்க முடியாத அப்பெண், கடந்த 30ம் தேதி கிராமத்தில் மின்சாரம் இல்லாத சமயத்தில் வீட்டை விட்டு ஓடி அந்த இளைஞருடன் திருமணமும் செய்து கொண்டார்.  அவரை தேடி அலைந்த பெற்றோர் இருவரையும் பிடித்துவிட்டனர்.

 
அதன்பின், அப்பெண்ணை கிராமத்திற்கு இழுத்து வந்தனர். அதற்குள் ஊர் பெரியவர் சேர்ந்து பஞ்சாயத்து கூட, அப்பெண்ணை கட்டி வைத்து அடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் படி, அப்பெண்ணை கட்டி வைத்து ஊர் மக்கள் அனைவரும் அடித்துள்ளனர். இதில் கொடுமை என்னவெனில், முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவரின் பெற்றோரும் இதை வேடிக்கைப் பார்த்துள்ளனர்.
 
இந்த வீடியோவை எடுத்து ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments