Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படாது: வெங்கய்ய நாயுடு தடாலடி!!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:02 IST)
12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். 

 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதை அடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை கூடியது. மக்களவையில் மூன்று வேளாண்மை சட்ட திருத்தங்களும் வாபஸ் பெறக் கூடிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மசோதா மீது விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் எம்பிக்கள் ஈடுபட்டதை அடுத்து அமளியில் ஈடுபட்ட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில் இன்று 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். 
 
பின்னர் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை எதிர்த்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய விசிகவினர்.. அண்ணாமலை கண்டனம்..!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்: 11 புறநகர் ரயில்கள் ரத்து

ரூ.30,000 கோடி கூகுளுக்கு அபராதம்.. ரத்து செய்யாவிட்டால் நடவடிக்கை என டிரம்ப் எச்சரிக்கை..!

8 மாதங்களுக்கு காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு! காதலனே கொலை செய்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments