Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவிக்கு வந்த பின்தான் ஆசைப்பட்டு ஏமாந்து போனேன் - வெங்கையா நாயுடு

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (16:05 IST)
உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டு போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போனதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புலம்பியுள்ளார்.

 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் போலி விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு போலி விளம்பரத்தால் தான் ஏமாந்து போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
 
துணை ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் ஒருநாள் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் உடல் எடையை குறைக்கும் மாத்திரை சாப்பிட்டால் உறுதியாக உடல் எடை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டு, வெங்கையா நாயுடு உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
 
அப்போது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மாத்திரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என் கூறியுள்ளனர். இவர் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் மாத்திரைகளுக்கு பதில் இ-மெயில் மட்டுமே வந்துள்ளது. அதில், வேறொரு மாத்திரை வாங்கிக்கொள்ளுங்கள் அதுவும் ஆயிரம் ரூபாய்தான். ஆனால் விரைவாக உடல் எடை குறையும் என குறிப்பிட்டு இருந்துள்ளது.
 
இதனையடுத்து சந்தேகம் அடைந்த வெங்கையா நாயுடு விசாரித்ததில், அந்நிறுவனம் இந்தியாவை சேர்ந்தது இல்லை அமெரிக்காவை சேர்ந்தது என்று தெரிந்துள்ளது. இதுபோன்ற போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றாத வகையில் கடுமையான சட்டங்களும், போலி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments