Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையை தூண்டிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் கைது!

வன்முறையை தூண்டிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் கைது!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (10:17 IST)
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் வன்முறையை தூண்டி விட்டு அதனை அறங்கேற்றியவர்களில் வாட்டாள் நாகராஜ் முக்கியமானவர். அவரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.


 
 
நேற்று பெங்களூருவில் கடும் கலவரம் மூண்டது. 50-க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 30-க்கும் மேற்பட்ட லாரிகளும் தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.
 
மேலும் பெங்களூரில் பதற்றமான சூழல் நிலவி வந்ததால், மேலும் கலவரம் பெரிதாகமல் இருக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் கன்னட வெறியர்கள் தமிழர்களின் உணவகங்களை தேடி தேடி கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.
 
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதை தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு விதானசவுதாவை நள்ளிரவில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து கலவரம் மூண்டுவிடக்கூடாது என்பதற்காக வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
 
வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments