Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்.. சோதனை ஓட்டம் ஆரம்பம்..!

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (07:43 IST)
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயக்கப்படும் நிலையில் அடுத்த கட்டமாக வந்தே மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயங்கக்கூடிய வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதில் சென்னை - திருப்பதி வழித்தடமும் இருப்பதாக கூறப்படுகிறது.

வந்தே மெட்ரோ ரயில் மூலம் 124 முக்கிய நகரங்களை இணைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ள நிலையில் அதில் லக்னோ - கான்பூர், ஆக்ரா - மதுரா, டெல்லி, - ரிவாரி, புவனேஸ்வர் -பாலசோர், திருப்பதி - சென்னை ஆகிய வழி தடங்களும் உள்ளன

இந்த ரயில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் 12 பெட்டிகள் முதல் 16 பெட்டிகள் வரை இந்த ரயிலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்யாத பயணிகளும் இதில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments