விபத்து நடந்த இடத்தில் மெதுவாக இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்.. அதிகாரிகள் ஆய்வு..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (10:38 IST)
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் இன்று காலை முதல் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அதே தண்டவாளத்தில் வந்தே பாரத் ரயில் மெதுவாக இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாகநாகா ரயில் நிலையத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் 51 மணி நேரத்தில் மீட்பு பணிகள் முடிவடைந்து தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு இன்று காலை முதல் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. 
 
இந்த நிலையில் விபத்து நடந்த தண்டவாளத்தில் சற்று முன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. ஹவுராவிலிருந்து பூரி செல்லும் வந்தே பாரத் ரயில் இந்த பாதையில் மெதுவாக இயக்கப்பட்டதாகவும் இந்த ரயில் தண்டவாளத்தை கடந்த போது ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல்கள் வெளியானது. 
 
இனி அடுத்தடுத்து அனைத்து பயணிகள் ரயில்களும் இந்த தண்டவாளத்தில் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments