எருமைகள் மோதியதில் கண்டமான வந்தே பாரத் என்ஜின் முன்பகுதி!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (15:44 IST)
சமீபத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் ரயிலின் என்ஜின் பகுதி காட்டெருமை மீது மோதியதில் சேதமடைந்துள்ளது.

முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்கள் ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்டு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று மும்பை செண்ட்ரலில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த ரயில் வத்வா ரயில் நிலையத்திற்கும், மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எருமைகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டதால் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. ஆனால் இந்த விபத்தால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பழுதடைந்த எஞ்சின் பகுதியை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments