Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் திடீர் பின்னடைவு..! என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:50 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணியில் திடீரென பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரங்கப்பாதையை துளை செய்யும் இயந்திரத்தை தாங்கி நிற்கும் அடித்தளம் திடீரென சேதமடைந்தது. இதன் காரணத்தால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 46.8 மீட்டர் வரை சுரங்கப்பாதை துளையிடப்பட்டுள்ளதாக, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை நெருங்கி விட்டதாகவும் மீட்பு குழுவினர்   தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீட்பு பணி தாமதம் ஆவதால் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவுக்குள் மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments