Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் திடீர் பின்னடைவு..! என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:50 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணியில் திடீரென பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரங்கப்பாதையை துளை செய்யும் இயந்திரத்தை தாங்கி நிற்கும் அடித்தளம் திடீரென சேதமடைந்தது. இதன் காரணத்தால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 46.8 மீட்டர் வரை சுரங்கப்பாதை துளையிடப்பட்டுள்ளதாக, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை நெருங்கி விட்டதாகவும் மீட்பு குழுவினர்   தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீட்பு பணி தாமதம் ஆவதால் சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவுக்குள் மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments