மோடிக்கு ஆதரவாக திடீரென பேசிய உத்தவ் தாக்கரே.. இந்தியா கூட்டணியினர் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (14:22 IST)
பிரதமர் மோடியை இதுவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்த உத்தவ் தாக்கரேதிடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசி இருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது 
 
ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகிவிட்ட நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார் என்று கூறியுள்ளார். 
 
மேலும் மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட போது எங்கள் தந்தை தான் அவருக்கு உதவி செய்தார், ஆனால் மோடியோ எங்கள் எதிரிக்கு உதவி செய்து என்னுடைய கட்சியை உடைத்து உள்ளார் என்று கூறியுள்ளார். 
 
இருப்பினும் உத்தவ் தாக்கரே தான் மோடிக்கு எதிரியில்லை என்று கூறியதை அடுத்து மீண்டும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஏற்படுமா? மீண்டும் இந்தியா கூட்டணியை உடையுமா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments