Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பழைய நாடாளுமன்ற கட்டிடம் தான்: உத்தவ் தாக்கரே கட்சி எம்பி.!

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பழைய நாடாளுமன்ற கட்டிடம் தான்: உத்தவ் தாக்கரே கட்சி எம்பி.!

Siva

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:24 IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று சிவசேனா கட்சியின்  உத்தவ் தாக்கரே பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் பேசியுள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் கூட்டத்தொடரை நடத்துவோம் என சஞ்சய் ரௌத் பேசியுள்ளார்

மேலும் புதிய நாடாளுமன்றம் 5 நட்சத்திர சிறை போன்ற உள்ளது என்றும் அங்கு யாரும் வேலை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் இந்திய வேளாண் அமைச்சர்களில் மிகவும் சிறந்தவர் என சரத் பவாரை பிரதமர் மோடியே ஒருமுறை குறிப்பிட்டு இருந்தார் என்றும் ஆனால் தற்போது அவரது கட்சியை மோடி உடைத்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்

பிரதமர் மோடி 400 தொகுதிகளில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறுவதற்கு பதிலாக 600 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி இருக்கலாம் என அவர் கிண்டலுடன் குறிப்பிட்டார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம்: கங்கனா ரனாவத்