Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாசி நிலச்சரிவு: காணாமல் போன 10 ராணுவ வீரர்கள்.. தேடும் பணி தீவிரம்

Siva
புதன், 6 ஆகஸ்ட் 2025 (07:48 IST)
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில், மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சுமார் 10 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரகாசியின் தராலி கிராமம் மற்றும் அதன் அருகிலுள்ள ஹர்சில் ராணுவ முகாம் அருகே மேக வெடிப்பு ஏற்பட்டது.இந்த மேக வெடிப்பு காரணமாக, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி ராணுவ முகாம் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
வெள்ளத்தில் 10 ராணுவ வீரர்கள் சிக்கி காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ முகாம் பாதிக்கப்பட்ட நிலையிலும், ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை  மற்றும் காவல்துறை குழுக்களும் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
 
ஏற்கனவே, இந்த நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ராணுவ வீரர்களின் நிலை என்ன ஆனது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments