உத்தரகாசி நிலச்சரிவு: காணாமல் போன 10 ராணுவ வீரர்கள்.. தேடும் பணி தீவிரம்

Siva
புதன், 6 ஆகஸ்ட் 2025 (07:48 IST)
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில், மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, சுமார் 10 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரகாசியின் தராலி கிராமம் மற்றும் அதன் அருகிலுள்ள ஹர்சில் ராணுவ முகாம் அருகே மேக வெடிப்பு ஏற்பட்டது.இந்த மேக வெடிப்பு காரணமாக, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி ராணுவ முகாம் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
வெள்ளத்தில் 10 ராணுவ வீரர்கள் சிக்கி காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ முகாம் பாதிக்கப்பட்ட நிலையிலும், ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை  மற்றும் காவல்துறை குழுக்களும் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
 
ஏற்கனவே, இந்த நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ராணுவ வீரர்களின் நிலை என்ன ஆனது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments