கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

Prasanth K
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (18:27 IST)

உத்தரகாண்டில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இந்த கொடூர விபத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள ஹர்சில் பகுதியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பை தொடர்ந்த வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தராலி கிராமத்தில் பிற்பகல் 1.45 மணியளவில் மேகவெடிப்பால் மலையிலிருந்து பெரும் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகளையும், ஏராளமான மக்களையும் அடித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த பெரும் அசம்பாவிதத்தை தொடர்ந்து இந்திய ராணுவ மீட்பு படைகள் உத்தரகாண்ட் நோக்கி விரைந்துள்ளன. ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் உயிர்பலி அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments