Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலை கிடைக்காததால் விரக்தி..! – ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:20 IST)
அரசு வேலைக்கு நீண்ட காலமாக முயற்சித்தும் கிடைக்காததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் ஆக்ரா நகரில் உள்ள நக்லா தல்ஃபி என்ற பகுதியை சேர்ந்தவர் இளைஞர் கர்மவீர் சிங். நீண்ட ஆண்டுகளாக கர்மவீர் சிங் அரசு வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். அதேபோல இந்திய ராணுவத்த்தில் இணைவதற்காகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் நீண்ட காலமாகியும் தனக்கு வேலை கிடைக்காததால் கர்மவீர் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் யமுனை நதிக்கு சென்ற அவர் தனக்கு அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், குடும்பத்தினர் கர்மவீரை தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் யமுனை ஆற்றங்கரையில் கர்மவீரின் செல்போன் மற்றும் காலணியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆற்றில் கர்மவீரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments